Wednesday, July 21, 2010

ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை...*

ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை...*
கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.

பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.

பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்

பெண்ணுக்கு உடலுறவு வேட்கைக் காலம்
இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.

அந்தக் கால கட்டம் எது?
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.

ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்

ஒரு பெண், ஆணை வெறுக்கக் காமசூத்திரம் கூறும் காரணங்கள்
ஒரு பெண்ணை ஆண், மனதார விரும்பி வரும் போது அவனை அவள் புறக்கணிக்கிறாள் என்றால் அதற்கு ஒவ்வொருவரும் வேறு காரணத்தை நாமாகத் தீர்மானித்துக் கொள்வோம். ஆனால் காமசூத்திரம் இதற்கு சுமார் 20 காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது. அவை என்ன தெரியுமா?

ஒழுக்கம்

சந்தேகம்

வயதான ஆணாக இருப்பது

குழந்தைப் பாசம்

உடல் நலக்குறைவு

கணவனை விட்டுப் பிரியாமல் இருத்தல்

கணவனிடம் உள்ள மிகுதியான அன்பு

அவனுக்குத் தன்னால் எந்தப் பிரச்சினையும் உண்டாகக் கூடாது என்ற எண்ணம்

சமூக நிலை

விஷயம் வெளியே தெரிந்தால் தனக்கு ஆபத்து உண்டாகுமோ என்ற எண்ணம்

காதலனின் துணிவு

கணவனால் பழி வாங்கப்படலாம் என்ற எண்ணம்

அவன் வேறு பெண்ணிடம் தொடர்பு கொண்டிருக்கலாம்

நல்ல, விரும்பத்தகுந்த குணம் இல்லாதவன்

காதலனிடம் பாதுகாப்பு இருக்காது என்ற சந்தேக மனப்பான்மை

காதலன் மீது நம்பிக்கை இல்லாமல் போவது

உலக, பொது அறிவு இல்லாதவன்

அன்பானவர்களைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம்

கணவனே இவனை அப்படி அனுப்பித் தன்னை சோதிக்கிறானோ என்ற எண்ணம்

கணவன் தன்னைப் பழி வாங்கி விடுவானோ என்ற எண்ணம்

இப்படிப்பட்ட காரணங்களாலேயே ஒரு பெண், ஆணை வெறுத்து ஒதுக்குகிறாள். எனவே ஒரு பெண்ணை விரும்புகிற ஆண், முதலில் மேற்கூறிய காரணங்களை உற்று நோக்கி, அந்தக் குறைபாடுகள் வராதவாறு நடந்து கொண்டால் அவள் சம்மதத்தை எளிதில் பெற முடியும்.

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்

பெண்களை எளிதாகக் கவரும் ஆண் எப்படிப்பட்டவன்...?
ஒரு பெண்ணை அடைவதென்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. இப்படிச் சொல்பவர்களும் உண்டு. நான் ஒரு பெண்ணை விரும்பினால் அவளை அடையாமல் விட மாட்டேன்.... அது எனக்கு மிக எளிதான காரியமும் கூட... இப்படி முரண்பட்ட கருத்துக்களை நாம் பார்க்கலாம். ஆம். மனதில் நினைத்த பெண்ணை அடைய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்திகளையும் கேள்விப்படுகிறேம். அதே சமயம், ஒரே ஆண் நினைத்த பெண்களையெல்லாம் அனுபவித்த கதைகளையும் கேள்விப்படுகிறேம். இந்த இரண்டு விதமுமே நாட்டில் உண்டு. சரி. தோல்வியடைந்து புறமுதுகிட்டுப் போகும் ஆண்களைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இதில் தான் நினைத்த படி வெற்றி பெறும் ஆண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா...
தான் விரும்பிய பெண்ணை மிக எளிதாக அடைந்து விடும் ஆண்களுக்கென சில விஷேசக் குணங்கள் இருப்பதாக காமசூத்திரம் தொகுத்துக் கூறுகிறது. எப்படி? நாமும் அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்...

பெண்களைச் சந்தோஷப்படுத்தும் செயல்களைச் செய்பவன்.

விருந்துகளில் மகிழ்ச்சியாக இருப்பவன்

ஏராள, தாராளமாகப் பரிசுப் பொருட்களை வழங்குபவன்

பிற ஆணுக்காகத் தூது செல்பவன்

அன்பான குணத்தை இயற்கையாகவே கொண்டவன்

உல்லாசமாக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறவன்

அதிகத் துணிச்சல் உள்ளவன்

ஒன்றக வளர்ந்தவன்...

காம சாஸ்திரம் நன்கு கற்றவன்

அடிக்கடி பெண்கள் பார்வையில் தெரியும் படி இருப்பவன், நடந்து கொள்பவன்....

இளம் பருவத்தில் தோழனாக இருந்தவன்

மனதைக் கவரும் கதை சொல்வதில் வல்லவன்...

புதுமாப்பிள்ளை

முதலாளியாக இருப்பவன்

தாராள மனப்பான்மை உள்ளவன்

ரகசியத்தை அறிந்தவன்

அவளது தோழனுடன் தொடர்பு உள்ளவன்

பெண்ணின் கணவனை விட, அழகிலும், அறிவிலும் சிறந்தவன்....

செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்

செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்
இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது.... இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான்.

இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது...

சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?

உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.

இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை.

மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்


ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்...?
ஆண்களிடம் எளிதில் மயங்கி விடும் பெண்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பது பற்றி காமசூத்திரம் என்ன கூறுகிறது என அறிந்து கொள்வோம்....

எல்லாப் பெண்களும் ஆண்களிடம் அவ்வளவு சுலபமாக மயங்கி விடுவதில்லை. அவர்களுக்குப் பிடிக்க வில்லையென்றால், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால் மனதுக்குப் பிடித்துப் போன ஆணுக்காக எதையும் செய்யவும் தயங்க மாட்டார்கள். ஆனால் சில பெண்கள் சிறிது முயற்சி செய்தாலே போதும். மயங்கி விடுவார்கள். இப்படி இவர்கள் மயங்குவதற்கு காமசூத்திரம் 20 காரணங்களைக் கூறுகிறது. அவை...

வேற்று ஆண்களை உற்று உற்றுப் பார்க்கிறவள்....

வஞ்சக நோக்கம் உடையவள்...

அடிக்கடி வீட்டு வாசலில் நிற்பவள்

வலியச் சென்று பழகும் குணம் உள்ளவள்

தூது செல்பவள்

தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்க்கிறவள்

குலப் பெருமையை அறிந்திராதவள்

மலடி

கணவனிடமிருந்து விலகி வாழ்பவள்

செக்சில் மிகுந்த விருப்பம் கொண்டவள்

வீட்டைத் தவிர, வெளி இடங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பவள்...

கட்டுப்பாடு இல்லாதவள்

அசாதாரணக் குணம் உள்ளவள்

தகுதியற்றவனை மணந்தவள்

வயதான கணவனைக் கொண்டிருப்பவள்

இளம் வயதில் கணவனை இழந்தவள்

அடிக்கடி வெளியூர் செல்லும் கணவனைப் பிரிந்திருக்க நேர்பவள்

காம இச்சை அதிகம் கொண்டவள்

ஆண்மையற்ற கொடுமைக்குணம் உள்ளவனை மணந்தவள்

கணவனை வெறுப்பவள்....

இப்படி வரையறுத்துக் கூறுகிறது,. எளிதில் ஆண்களிடம் மயங்கும் பெண்களைப் பற்றி....*

ஆண்களின் மனதில் காம இச்சை இயற்கையாக உண்டாகிறது. அதற்கு வடிவம் கொடுக்கும் வகையில் அவன் கடும் முயற்சிகள் செய்து பெண்ணை அடைகிறான். இதற்கிடையில் ஆபத்து வந்தால் அதையும் சமாளித்து வெற்றி கொள்கிறான். ஆனால் காம சாஸ்திரங்கள் மற்றவன் மனைவியையும், தன் மனைவியைத் தவிர வேறு பெண்களையும் விரும்புவதை ஆதரிக்க வில்லை. அதைத் தவறு என்கிறது அது.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.

கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

© HOT DEVIL - Template by Blogger Sablonlari